Posted by Admin on 20-06-2026
பொறுப்பேற்று இரண்டு நாட்களிலேயே மீண்டும் மாற்றம்
சிவகங்கை கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா மதுரைக்கு பணியிட மாற்றம்
தமிழக அரசு வெளியிட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்ற உத்தரவின்படி, சிவகங்கை மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த நிஷாந்த் கிருஷ்ணா, ஐஏஎஸ், மதுரை மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.
கடந்த ஜூன் 18ஆம் தேதி சிவகங்கை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக நிஷாந்த் கிருஷ்ணா பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்று இரண்டு நாட்கள் மட்டுமே ஆன நிலையில், மீண்டும் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பது மாவட்ட நிர்வாக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதே உத்தரவின்படி, மதுரை மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த பி. ஆகாஷ், ஐஏஎஸ், சிவகங்கை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
குறிப்பாக, மதுரை மாவட்ட ஆட்சியராக பி. ஆகாஷ் பொறுப்பேற்று 28 நாட்கள் மட்டுமே ஆன நிலையில் அவர் சிவகங்கைக்கு மாற்றப்பட்டுள்ளார். அதேபோல், சிவகங்கை மாவட்ட ஆட்சியராக நிஷாந்த் கிருஷ்ணா பொறுப்பேற்று வெறும் இரண்டு நாட்களிலேயே மதுரைக்கு மாற்றப்பட்டிருப்பது இந்த பணியிட மாற்றத்திற்கு மேலும் முக்கியத்துவத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்தடுத்து மிகக் குறுகிய கால இடைவெளியில் இரண்டு மாவட்டங்களின் ஆட்சியர்களும் மாற்றப்பட்டுள்ளதால், இந்த உத்தரவு நிர்வாக வட்டாரங்கள் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
கொல்லங்குடியில் களைகட்டிய மாட்டு வண்டிப் பந்தயம்
கொல்லங்குடியில் களைகட்டிய மாட்டு வண்டிப் பந்தயம்
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ள கொல்லங்குடியில் மு
சட்ட விரோத மின்வேலியில் சிக்கி இளைஞர் ப*லி.
மானாமதுரையில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு தீவிரம்!
மானாமதுரை மண்பாண்டத்தில் களிமண்ணால் ஆன விநாயகருக்கு பணிகள் தீவிரம் 10 தினங்களில் வர்ணம் தீட்டு பணிகள் தொடக்கம்
Leave a Comment
Your comment will be visible after admin approval.