Mon, Jun 29, 2026 01:33 PM

மேலபசலைப் பகுதியில் இரண்டு தனியார் பேருந்துகள் விபத்து

Posted by admin on 29-06-2026


மேலபசலைப் பகுதியில் இரண்டு தனியார் பேருந்துகள் விபத்து

இரண்டு தனியார் பேருந்துகள் விபத்து – போட்டி போட்டு முந்திச் செல்ல முயன்றதால் 25-க்கும் மேற்பட்டோர் காயம்

 ராமநாதபுரம் மாவட்டம்
 பரமக்குடி பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை நோக்கி புறப்பட்ட இரண்டு தனியார் பேருந்துகள் வழிநெடுகிலும் ஒன்றையொன்று முந்திச் செல்லும் வகையில் போட்டியிட்டு சென்றதாக கூறப்படுகிறது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மேலபசளை பகுதியில் வந்தபோது, அப்பகுதியில் மழை பெய்து கொண்டு இருந்த நிலையில் இரண்டு பேருந்துகளும் வேகமாக முந்திச் செல்ல முயன்றதாக தெரிகிறது.

அப்போது ஓட்டுநர்களின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்துகள் சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்துகளில் பயணம் செய்த 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மற்றும் மீட்புப் பணியாளர்கள் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்திற்கான காரணம் குறித்து மானாமதுரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பேருந்துகள் போட்டி போட்டு இயக்கப்பட்டதே விபத்திற்குக் காரணமா என்பது தொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Share: 5 Views

மேலும் படிக்க

Leave a Comment

Your comment will be visible after admin approval.