Posted by admin on 28-06-2026
முறையூரில் ஆனி திருமஞ்சன விழா: அன்னை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெற்றது
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே முறையூரில் அமைந்துள்ள பழமையான ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் திருக்கோவிலில், ஆனி திருமஞ்சன பெருவிழாவை முன்னிட்டு அன்னை மீனாட்சி மற்றும் சுந்தரேஸ்வரருக்கு திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.
சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்கு உட்பட்ட சுமார் 800 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தில், கடந்த ஜூன் 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.
விழாவின் எட்டாம் நாளில் சிறப்பு பூஜைகளுடன் அன்னை மீனாட்சி மற்றும் சுந்தரேஸ்வரருக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
திருமாங்கல்ய தாரணம் மற்றும் மாலை மாற்றுதல் உள்ளிட்ட வைபவங்கள் நடைபெற்ற நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் பட்டாச்சாரியார்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
தேவகோட்டை சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவிலில் ஆனித்திருவிழா தேரோட்டம்
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட தேவகோட்டை சொர்ணமூர்த்தீஸ்வரர் மற்றும் பெரிய நாயகி அம்பாள் கோவிலில் ஆனித
வடவன்பட்டியில் கொடிவளைவுத் திருவிழா
வடவன்பட்டியில் கொடிவளைவுத் திருவிழா
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே வடவன்பட்டியில் கொடிவளைவுத்
திருவிழ
வஞ்சினிப்பட்டியில் இந்து முஸ்லிம் ஒற்றுமையை பறைசாற்றும் பூக்குழித் திருவிழா
வஞ்சினிப்பட்டியில் இந்து முஸ்லிம் ஒற்றுமையை பறைசாற்றும் பூக்குழித் திருவிழா
சிவகங்கை மாவட்டம் திர
Leave a Comment
Your comment will be visible after admin approval.