Posted by Admin on 20-06-2026
தட்டட்டியில் மீன்பிடித்திருவிழா
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே தட்டட்டி பெரிய கண்மாயில் மீன்பிடித்திருவிழா நடைபெற்றது.
நாச்சியாபுரம் அருகே தட்டட்டி கிராமத்தில் உள்ள பெரியகண்மாயில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு மீன்குஞ்சுகள் விடப்பட்டு வளர்ந்து வந்த நிலையில் ஊத்தா குத்துதல் மூலம் மீன்பிடித்திருவிழா நடத்துவது என கிராமத்தினர் முடிவெடுத்தனர். ஒரு ஊத்தாவிற்கு ரூ. 500 வசூல் செய்யப்பட்டு 800 பேருக்கு டோக்கன் வழங்கபட்டது. ஏலதாரர்கள் கண்மாய் கரையிலிருந்து வெள்ளைவீசி அறிவிப்பு செய்ததையடுத்து மீன்பிடி வீரர்கள் கண்மாய்க்குள் இறங்கி மீன்பிடிக்க ஆரம்பித்தனர். இதில் கட்லா, ரோகு, விரால், கெளுத்தி, போன்ற நாட்டுவகை மீன்கள் ஒவ்வொருவருக்கும் 10 முதல் 20 கிலோ வரை கிடைத்ததால் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். திருப்பத்தூர், திண்டுக்கல், சிவகங்கை, காரைக்குடி, போன்ற சுற்றுவட்டார கிராமங்களிலிருந்தும் ஏராளமானோர் இதில் பங்கு கொண்டனர். 2 மணி நேரம் மீன்பிடிப்பிற்கு பிறகு கிராமத்தினரும் வலை, அரிகூடை, கச்சா போன்றவைகளாலும் மீன்களைப் பிடித்துச் சென்றனர்.
சிவகங்கையில் அனுமதியின்றி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட திமுகவினர் கைது
சிவகங்கையில் காவல்துறை அனுமதியின்றி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட திமுகவினர் கைது.
சிவகங்கை அரண்ம
மேலபசலைப் பகுதியில் இரண்டு தனியார் பேருந்துகள் விபத்து
இரண்டு தனியார் பேருந்துகள் விபத்து – போட்டி போட்டு முந்திச் செல்ல முயன்றதால் 25-க்கும் மேற்பட்டோர் காயம்
ராமநாத
காரைக்குடியில் வாலிபர் கொலை
காரைக்குடியில் வாலிபர் கொலை - போலீசார் விசாரணை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி KMC மருத்துவமனை எதிரில் உள்ள சாலையில
Leave a Comment
Your comment will be visible after admin approval.