Fri, Aug 28, 2026 12:40 PM

சிவகங்கை மாவட்டத்தின் புதிய கலெக்டராக நிஷாந்த் கிருஷ்ணன் நியமனம்

Posted by Admin on 17-06-2026


சிவகங்கை மாவட்டத்தின் புதிய கலெக்டராக நிஷாந்த் கிருஷ்ணன்  நியமனம்

புதிய கலெக்டர் 

சிவகங்கை மாவட்டத்தின் புதிய கலெக்டராக நிஷாந்த் கிருஷ்ணன் ஐஏஎஸ் நியமனம். தற்போதைய கலெக்டராக இருந்த கா.பொற்கொடி ஐஏஎஸ் சென்னை சமூக நலத்துறைக்கு மாற்றம்.

தமிழக அரசின் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்ற உத்தரவின் அடிப்படையில், சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவராக புதிய கலெக்டர் நியமிக்கப்பட்டுள்ளார்.

நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த நிஷாந்த் கிருஷ்ணன், ஐஏஎஸ் உடனடியாக மாற்றப்பட்டு சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்

இதுவரை சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவராக பணியாற்றி வந்த கா. பொற்கொடி, ஐஏஎஸ் மாற்றப்பட்டு சென்னை சமூக நலத்துறையின் கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Share: 1,982 Views

மேலும் படிக்க

Leave a Comment

Your comment will be visible after admin approval.