Mon, Jun 29, 2026 11:16 AM

சிவகங்கையில் கோழி தீவனம் ஏற்றி சென்ற லாரி, கார் மீது மோதி விபத்து

Posted by admin on 28-06-2026


சிவகங்கையில் கோழி தீவனம் ஏற்றி சென்ற லாரி, கார் மீது மோதி விபத்து

சிவகங்கை மாவட்டத்தில் கோழி தீவனம் ஏற்றி சென்ற லாரி, கார் மீது மோதி விபத்து… இதில் கார் ஓட்டுநர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி… போலீசார் தீவிர விசாரணை…

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை – சிவகங்கை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உருளி விளக்கு பகுதியில்  சாலை விபத்து ஒன்று நடைபெற்றுள்ளது.

தூத்துக்குடியில் இருந்து நாமக்கல் நோக்கி கோழி தீவனம் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை ஈரோடு மாவட்டம் பவானி பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் ஓட்டி வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அப்போது, திருப்புவனம் அருகே பாப்பாகுடி கிராமத்தைச் சேர்ந்த அருண் என்பவர் காரில் வந்து கொண்டிருந்த நிலையில், எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த லாரி, கார் மீது வேகமாக மோதியது.

இந்த விபத்தில் கார் சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்ததுடன், கார் ஓட்டுநர் அருண் பலத்த காயமடைந்தார்.

உடனடியாக அப்பகுதி மக்கள் அவரை மீட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து காயமடைந்த அருணின் மனைவி சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share: 1,987 Views

மேலும் படிக்க

காரைக்குடியில் நடைபெற்ற கிடாய் சண்டை போட்டி காரைக்குடியில் நடைபெற்ற கிடாய் சண்டை போட்டி காரைக்குடியில் நடைபெற்ற கிடாய் சண்டை போட்டி 4 மாவட்டங்களில் இருந்து 52 ஜோடி கிடாய்கள் பங்கேற்பு சிவகங்கை மாவட்ட உலக திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் மாணவர்கள்–ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா   அமைச்சர் டி.கே பிரபு பங்கேற்பு உலக திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் மாணவர்கள்–ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா அமைச்சர் டி.கே பிரபு பங்கேற்பு உலக திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் மூன்று மாவட்டங்களில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தமிழ் பாடத்தில் முதல் காரைக்குடியில் போலியோ சொட்டு  மருந்து முகாமை தொடங்கி வைத்த அமைச்சர் டி.கே. பிரபு காரைக்குடியில் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்த அமைச்சர் டி.கே. பிரபு சிவகங்கையில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து! காரைக்குடியில் முகாமை தொடங்கி வைத்த அம
Leave a Comment

Your comment will be visible after admin approval.