Fri, Aug 28, 2026 01:50 PM

காரைக்குடி சௌமியா தொடக்கப் பள்ளியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் டி.கே. பிரபு

Posted by Admin on 27-06-2026


காரைக்குடி சௌமியா தொடக்கப் பள்ளியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் டி.கே. பிரபு

காரைக்குடியில் அருள்மிகு சவுண்டாம்பிகை அம்மன் கோவிலுக்கு பாத்தியப்பட்ட சௌமியா தொடக்கப் பள்ளியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் டாக்டர் டி கே பிரபு தலைமை தாங்கி வழங்கினார். 

கோவில் கலையரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்குத் தேவையான டேபிள், சேர் மற்றும் மாணவ மாணவிகளுக்கான நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழக வெற்றிக் கழக சிவகங்கை கிழக்கு மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் சதீஷ்குமார் தலைமையில் நிர்வாகிகள் பிரபாகரன், மணிகண்டன், ரவிச்சந்திரன், சரவணன், மாணிக்கம், பிரபாகரன் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Share: 970 Views

மேலும் படிக்க

Leave a Comment

Your comment will be visible after admin approval.