Mon, Jun 29, 2026 11:14 AM

சிறுகூடல்பட்டியில் "நீயே உனக்கு என்றும் நிகரானவன்" நூல் வெளியீட்டு விழா

Posted by admin on 26-06-2026


சிறுகூடல்பட்டியில்  "நீயே உனக்கு என்றும் நிகரானவன்" நூல் வெளியீட்டு விழா

சிறுகூடல்பட்டியில் கண்ணதாசன் நூற்றாண்டு விழா நூல் வெளியீடு


  சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டியில் கண்ணதாசனின் 100 ஆவது பிறந்தநாளையொட்டி நீயே உனக்கு என்றும் நிகரானவன் என்ற தலைப்பில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

                        கண்ணதாசன் பிறந்த ஊரான சிறுகூடல்பட்டியில் அவர் பிறந்த வீட்டில் பாரதி இலக்கியக்கழககமும் திருப்பத்தூர் எழுத்தாளர்கள் கூட்டமைப்பு சங்கமும் இணைந்து  கவிஞரின் 100 பிறந்தநாளை கொண்டாடியது. இந்நிகழ்ச்சிக்கு எழுத்தாளர் கூட்டமைப்புத் தலைவர் எஸ்.எல்.எஸ்.பழனியப்பன் தலைமை வகித்தார்,. பாரதி இலக்கியக்கழகத் தலைவர் ஜெ.யச்சந்திரன் புலவர் மெய்யாண்டவர், கண்ணதாசன் மகள் விசாலி, குடும்பத்தினர் பழனியப்பன், சாத்தப்பன்   ஆகியோர் முன்னிலை வகித்தனர், விழாவின் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கலந்து கொண்டு நீயே உனக்கு என்றும் நிகரானவன் என்ற தலைப்பில் நூலினை வெளியிட சேதுபாஸ்கரா கல்விக்குழும நிறுவனர் சேதுகுமணன் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணாக்கர்கள் கண்ணதாசனின் வாழ்க்கைத் தொகுப்பினை குறித்துப் பேசினர், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கவிஞர்கள், பேச்சாளர்கள், எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர். விழாக்குழு சார்பில் அவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

Share: 1,253 Views

மேலும் படிக்க

காரைக்குடியில் நடைபெற்ற கிடாய் சண்டை போட்டி காரைக்குடியில் நடைபெற்ற கிடாய் சண்டை போட்டி காரைக்குடியில் நடைபெற்ற கிடாய் சண்டை போட்டி 4 மாவட்டங்களில் இருந்து 52 ஜோடி கிடாய்கள் பங்கேற்பு சிவகங்கை மாவட்ட உலக திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் மாணவர்கள்–ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா   அமைச்சர் டி.கே பிரபு பங்கேற்பு உலக திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் மாணவர்கள்–ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா அமைச்சர் டி.கே பிரபு பங்கேற்பு உலக திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் மூன்று மாவட்டங்களில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தமிழ் பாடத்தில் முதல் காரைக்குடியில் போலியோ சொட்டு  மருந்து முகாமை தொடங்கி வைத்த அமைச்சர் டி.கே. பிரபு காரைக்குடியில் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்த அமைச்சர் டி.கே. பிரபு சிவகங்கையில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து! காரைக்குடியில் முகாமை தொடங்கி வைத்த அம
Leave a Comment

Your comment will be visible after admin approval.