Posted by admin on 25-06-2026
பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி விவசாயிகள் வேளாண்மை அலுவலகம் முற்றுகை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகாவிற்குட்பட்ட செந்தட்டியேந்தல் வருவாய் கிராமப் பகுதிகளில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் தென் மண்டல விவசாயிகள் சங்கத்தினர் வேளாண்மைத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசகுளம், புதுக்குளம், தாலிக்குளம் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 2025-26 பருவத்தில் போதிய மழை இல்லாததால் பயிர்கள் பாதிக்கப்பட்டதாகவும், சுமார் 180 ஏக்கர் நிலங்களுக்கு இதுவரை பயிர் காப்பீட்டுத் தொகை மற்றும் வறட்சி நிவாரணம் வழங்கப்படவில்லை என்றும் விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தங்களது கோரிக்கை மனுவை வேளாண்மைத் துறை அதிகாரிகளிடம் வழங்கினர். தொடர்ந்து விவசாயிகள் மற்றும் அதிகாரிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அலுவலகம் முன்பு திரண்டிருந்த விவசாயிகள் மற்றும் பெண்கள் அதிகாரிகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்
காரைக்குடியில் நடைபெற்ற கிடாய் சண்டை போட்டி
காரைக்குடியில் நடைபெற்ற கிடாய் சண்டை போட்டி
4 மாவட்டங்களில் இருந்து 52 ஜோடி கிடாய்கள் பங்கேற்பு
சிவகங்கை மாவட்ட
உலக திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் மாணவர்கள்–ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா அமைச்சர் டி.கே பிரபு பங்கேற்பு
உலக திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் மூன்று மாவட்டங்களில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தமிழ் பாடத்தில் முதல்
காரைக்குடியில் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்த அமைச்சர் டி.கே. பிரபு
சிவகங்கையில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து! காரைக்குடியில் முகாமை தொடங்கி வைத்த அம
Leave a Comment
Your comment will be visible after admin approval.