Posted by Admin on 23-06-2026
ஊடகத்திற்கு பேட்டி அளித்த டாஸ்மாக் ஊழியரை தற்காலிக பணி நீக்க நடவடிக்கையை ரத்து செய்ய கோரி சிவகங்கையில் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.
சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு, சிவகங்கை மாவட்ட டாஸ்மாக் அனைத்து ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மக்கள் மன்றம் மற்றும் ஊடகங்கள் வாயிலாக டாஸ்மாக் ஊழியர்களின் பிரச்சினைகளை எடுத்துரைத்த மாநில சம்மேளன (CITU) துணைப் பொதுச் செயலாளர் ஜான் (எ) ராதாகிருஷ்ணன் மீது எடுக்கப்பட்ட தற்காலிக பணிநீக்க நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும், பேச்சுரிமை மற்றும் கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும், தொழிற்சங்க தலைவர்களை பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட்டு, டாஸ்மாக் ஊழியர்களின் நீண்டகால கோரிக்கைகளுக்கு அரசு தீர்வு காண வேண்டும் என முழக்கமிட்டனர்.
சிவகங்கையில் அனுமதியின்றி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட திமுகவினர் கைது
சிவகங்கையில் காவல்துறை அனுமதியின்றி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட திமுகவினர் கைது.
சிவகங்கை அரண்ம
மேலபசலைப் பகுதியில் இரண்டு தனியார் பேருந்துகள் விபத்து
இரண்டு தனியார் பேருந்துகள் விபத்து – போட்டி போட்டு முந்திச் செல்ல முயன்றதால் 25-க்கும் மேற்பட்டோர் காயம்
ராமநாத
காரைக்குடியில் வாலிபர் கொலை
காரைக்குடியில் வாலிபர் கொலை - போலீசார் விசாரணை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி KMC மருத்துவமனை எதிரில் உள்ள சாலையில
Leave a Comment
Your comment will be visible after admin approval.