Posted by admin on 23-06-2026
சிவகங்கையில் மழை எதிரொலி: சொகுசு கார் மீது விழுந்த மரம் – போக்குவரத்து பாதிப்பு
சிவகங்கை நகரில் சுமார் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்த நிலையில், சிவகங்கை–திருப்பத்தூர் சாலையில் உடையார்சேர்வை ஊரணி அருகே இருந்த பெரிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்து, அங்கு நிறுத்தப்பட்டிருந்த சொகுசு கார் மீது விழுந்தது.
இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. தகவலறிந்து வந்த சிவகங்கை வட்டாட்சியர் சிவராமன் தலைமையிலான அதிகாரிகளின் உத்தரவின்படி ஊழியர்கள் மரத்தை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.
சேதமடைந்த கார் நாட்டரசன்கோட்டை பேரூராட்சி திமுக உறுப்பினர் மோகனுக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது. மரம் விழுந்ததால் அந்தப் பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சிவகங்கையில் அனுமதியின்றி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட திமுகவினர் கைது
சிவகங்கையில் காவல்துறை அனுமதியின்றி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட திமுகவினர் கைது.
சிவகங்கை அரண்ம
மேலபசலைப் பகுதியில் இரண்டு தனியார் பேருந்துகள் விபத்து
இரண்டு தனியார் பேருந்துகள் விபத்து – போட்டி போட்டு முந்திச் செல்ல முயன்றதால் 25-க்கும் மேற்பட்டோர் காயம்
ராமநாத
காரைக்குடியில் வாலிபர் கொலை
காரைக்குடியில் வாலிபர் கொலை - போலீசார் விசாரணை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி KMC மருத்துவமனை எதிரில் உள்ள சாலையில
Leave a Comment
Your comment will be visible after admin approval.