Mon, Jun 29, 2026 01:56 PM

சிவகங்கையில் மழை எதிரொலி: சொகுசு கார் மீது விழுந்த மரம் – போக்குவரத்து பாதிப்பு

Posted by admin on 23-06-2026


சிவகங்கையில் மழை எதிரொலி: சொகுசு கார் மீது விழுந்த மரம் – போக்குவரத்து பாதிப்பு

சிவகங்கையில் மழை எதிரொலி: சொகுசு கார் மீது விழுந்த மரம் – போக்குவரத்து பாதிப்பு

சிவகங்கை நகரில் சுமார் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்த நிலையில், சிவகங்கை–திருப்பத்தூர் சாலையில் உடையார்சேர்வை ஊரணி அருகே இருந்த பெரிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்து, அங்கு நிறுத்தப்பட்டிருந்த சொகுசு கார் மீது விழுந்தது.

இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. தகவலறிந்து வந்த சிவகங்கை வட்டாட்சியர் சிவராமன் தலைமையிலான அதிகாரிகளின்  உத்தரவின்படி ஊழியர்கள் மரத்தை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.

சேதமடைந்த கார் நாட்டரசன்கோட்டை பேரூராட்சி திமுக உறுப்பினர் மோகனுக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது. மரம் விழுந்ததால் அந்தப் பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Share: 1,127 Views

மேலும் படிக்க

Leave a Comment

Your comment will be visible after admin approval.