Posted by admin on 22-06-2026
கல்லல் முருகப்பா பள்ளியில் உலக யோகா தினக் கொண்டாட்டம்:
சிவகங்கை மாவட்டம் கல்லல் முருகப்பா மேல்நிலைப் பள்ளியில் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது. தாடாசனம், பத்மாசனம், புஜங்காசனம், பாலாசனம்,பவனமுக்தாசனம்,
விருஷாசனம்
திரிகோணாசனம்
அர்த்த சக்ராசனம்,
வஜ்ராசனம்,
பாதஹஸ்தானம் ஆகிய ஆசனங்கள் கற்றுக் கொடுக்கப்பட்டது. பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் சுப்பிரமணியன், தேசிய மாணவர் படை ஆசிரியர் கண்ணதாசன் மற்றும் காரைக்குடி சங்கமம் அறக்கட்டளையைச் சேர்ந்த சண்முகநாதன், லோகநாதன், சண்முகப் பெருமாள் ஆகியோர் யோகப் பயிற்சிகளைக் கற்றுக் கொடுத்தார்கள். மாணவர்கள் அனைவரும் இணைந்து கூட்டு உடற்பயிற்சியிலும் ஈடுபட்டனர். முன்னதாக தலைமையாசிரியர் அழகப்பன் தலைமையேற்று யோகா தின நிகழ்ச்சியை தொடங்கி வைத்து யோகாவினால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய அரசு வழக்கறிஞரும், உறுதிமொழி ஆணையிருமான முருகேசன் யோகா தினத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசினார். ஆசிரியர்கள் கற்பகவல்லி, அமுதா,மாரிமுத்து இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஆசிரியர் பிரபு நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்தார்.
நகர வைரவன்பட்டியில் நூல் வெளியீட்டு விழா
வயிரவன்பட்டியில் நூல் வெளியீட்டு விழா
- சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நகர வயிரவன்பட்டி செட்டியார்
காரைக்குடி அழகப்பா கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
அழகப்பா அரசு கலைக் கல்லூரி கல்லூரியில் இளையோர் செஞ்சிலுவை சங்கத்தின் சார்பாக கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவிகளுக்
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் இலக்கியத் கருத்தரங்கு
அழகப்பா பல்கலைக்கழக நுண்கலைத்துறையில் சாகித்திய அகாதமியின் இலக்கிய அரங்கு
மத்திய அரசின் சாகித்திய அகாதமியுட
Leave a Comment
Your comment will be visible after admin approval.