Fri, Aug 28, 2026 10:00 AM

காளையார்கோவில் கோவில் குளம் கழிவு நீராக மாறும் அவலம். சுத்தப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

Posted by admin on 12-08-2026


காளையார்கோவில் கோவில் குளம் கழிவு நீராக மாறும் அவலம். சுத்தப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

காளையார்கோவில் கோவில் குளம் கழிவுநீராக மாறும் அவலம் – சுத்தப்படுத்தி சுகாதாரம் காக்க பொதுமக்கள் கோரிக்கை

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோவில் குளம் பராமரிப்பின்றி கழிவுநீர் தேங்கும் நிலையாக மாறி வருவது பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

காளையார்கோவிலில் கோவிலுக்கு சொந்தமான சுமார் 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளம், ஆண்டுதோறும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இருந்து வருகிறது. எப்போதும் நீர் வற்றாமல் காணப்படும் இந்த குளம், அப்பகுதியின் முக்கிய நீராதாரமாகவும் விளங்கி வருகிறது.

ஆனால் தற்போது குளத்தில் பல்வேறு கழிவுப் பொருட்கள் கொட்டப்படுவதால் நீர் மாசடைந்து, துர்நாற்றம் வீசும் நிலை ஏற்பட்டுள்ளது. குளத்தின் சில பகுதிகளில் கழிவுகள் தேங்கி காணப்படுவதால் சுகாதார சீர்கேடும் அதிகரித்துள்ளது. இதனால் பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் சுற்றுப்புற மக்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது.

குறிப்பாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் குளத்தின் தற்போதைய நிலையை கண்டு வேதனை தெரிவித்து வருகின்றனர். மாசடைந்த நீரால் நோய் பரவும் அபாயமும் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே கோவில் குளத்தை உடனடியாக சுத்தப்படுத்தி, கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குளத்தின் நீரை சீரமைத்து சுகாதாரமான சூழலை உருவாக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Share: 16 Views

மேலும் படிக்க

Leave a Comment

Your comment will be visible after admin approval.