Fri, Aug 28, 2026 11:03 AM

சிவகங்கை அரசு மருத்துவமனை முன்பு செவிலியர்கள் குரல்முழக்க போராட்டம்

Posted by Admin on 07-08-2026


சிவகங்கை அரசு மருத்துவமனை முன்பு செவிலியர்கள் குரல்முழக்க போராட்டம்

சிவகங்கை அரசு மருத்துவமனை முன்பு செவிலியர்கள் குரல் முழக்க போராட்டம்

சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் தேவசேனா தலைமையில் குரல் முழக்க போராட்டம் நடைபெற்றது.

அரசாணை 204-ஐ ரத்து செய்ய வேண்டும், தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 250 செவிலியர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

அரசாணை 204 காரணமாக பணிநிலை, பதவி உயர்வு மற்றும் ஊதிய முரண்பாடுகள் ஏற்படுவதாக குற்றம்சாட்டிய செவிலியர்கள், அரசாணையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Share: 1,004 Views

மேலும் படிக்க

Leave a Comment

Your comment will be visible after admin approval.