Posted by admin on 13-07-2026
உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறை சார்பில் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி விழிப்புணர்வு ரதத்தையும் பேரணியையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆட்சியர் அலுவலகத்திலிருந்து தாய்-சேய் நல மருத்துவமனை வரை நடைபெற்ற பேரணியில் சுகாதாரத் துறை அலுவலர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர்.
"தாய் மற்றும் குழந்தை நலனுக்காக கர்ப்பங்களுக்கிடையே ஆரோக்கியமான இடைவெளியைப் பேணுவோம்" என்ற கருப்பொருளை வலியுறுத்தி, குடும்ப நலத் திட்டங்கள் மற்றும் மக்கள்தொகை நிலைப்படுத்துதல் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கொல்லங்குடியில் களைகட்டிய மாட்டு வண்டிப் பந்தயம்
கொல்லங்குடியில் களைகட்டிய மாட்டு வண்டிப் பந்தயம்
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ள கொல்லங்குடியில் மு
சட்ட விரோத மின்வேலியில் சிக்கி இளைஞர் ப*லி.
மானாமதுரையில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு தீவிரம்!
மானாமதுரை மண்பாண்டத்தில் களிமண்ணால் ஆன விநாயகருக்கு பணிகள் தீவிரம் 10 தினங்களில் வர்ணம் தீட்டு பணிகள் தொடக்கம்
Leave a Comment
Your comment will be visible after admin approval.