Posted by Admin on 11-07-2026
சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயிலில் 72-வது ஆண்டு பூச்சொரிதல் திருவிழா கோலாகலம்; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
சிவகங்கை நகரின் பிரசித்தி பெற்ற அருள்மிகு பிள்ளைவயல் காளியம்மன் கோயிலில் 72-வது ஆண்டு பூச்சொரிதல் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. திருவிழாவையொட்டி சிவகங்கை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்.
ஆனி மாதத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழா, கடந்த ஜூலை 3-ஆம் தேதி காப்புக் கட்டுதல், தீமிதி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. அன்றைய தினம் கோயில் கொடிமரத்திற்கு தைலம், திருமஞ்சனம், மஞ்சள், பால், இளநீர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
திருவிழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான பூச்சொரிதல் விழா நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பூத்தட்டுகளை சுமந்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு மலர் அபிஷேகம் செய்து வழிபட்டனர். மேலும், பால்குடம் எடுத்து வந்தும், பூக்களை தூவியும், அன்னதானம் வழங்கியும் தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.
விழாவின் சிறப்பு நிகழ்வாக, குழந்தையுடன் அருள்பாலிக்கும் பிள்ளைவயல் காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்.
கொல்லங்குடியில் களைகட்டிய மாட்டு வண்டிப் பந்தயம்
கொல்லங்குடியில் களைகட்டிய மாட்டு வண்டிப் பந்தயம்
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ள கொல்லங்குடியில் மு
சட்ட விரோத மின்வேலியில் சிக்கி இளைஞர் ப*லி.
மானாமதுரையில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு தீவிரம்!
மானாமதுரை மண்பாண்டத்தில் களிமண்ணால் ஆன விநாயகருக்கு பணிகள் தீவிரம் 10 தினங்களில் வர்ணம் தீட்டு பணிகள் தொடக்கம்
Leave a Comment
Your comment will be visible after admin approval.