Posted by admin on 10-07-2026
தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய், 52வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, காரைக்குடி அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக முன்னாள் பெருநகர துணை செயலாளர், காரைக்குடி முன்னாள் நகர் மன்ற உறுப்பினரும் ஆனந்தி தங்கவேல் தலைமையில் 52 உறுப்பினர்களுடன் தமிழக வெற்றிக்கழகத்தில் சிவகங்கை கிழக்கு மாவட்ட செயலாளர், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர், சுரங்க மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் டி கே பிரபு தலைமையில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்நிகழ்வில் கண்ணன் மகாலிங்கம் சுப்பையா, மாலதி,செல்வி, மஞ்சுளா,ராஜேஸ்வரி, அடைக்கம்மாள், பிரியா, லட்சுமி, வள்ளி,மீனாள், பூரணம் ஆகியோரும் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் நவமணி ராஜன் உடன் இருந்தார். தமிழக வெற்றி களத்தில் தன்னை இணைத்துக் கொண்ட ஆனந்தி தங்கவேல் கடந்த 28 ஆண்டுகளாக காரைக்குடி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பெருநகரதுணை செயலாளராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
கொல்லங்குடியில் களைகட்டிய மாட்டு வண்டிப் பந்தயம்
கொல்லங்குடியில் களைகட்டிய மாட்டு வண்டிப் பந்தயம்
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ள கொல்லங்குடியில் மு
சட்ட விரோத மின்வேலியில் சிக்கி இளைஞர் ப*லி.
மானாமதுரையில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு தீவிரம்!
மானாமதுரை மண்பாண்டத்தில் களிமண்ணால் ஆன விநாயகருக்கு பணிகள் தீவிரம் 10 தினங்களில் வர்ணம் தீட்டு பணிகள் தொடக்கம்
Leave a Comment
Your comment will be visible after admin approval.