Posted by Admin on 05-07-2026
எதிர்க்கட்சியே இல்லாத நிலை வரும்; தளபதி நிரந்தர முதலமைச்சராக இருப்பார் - திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாச சேதுபதி பேச்சு
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் தவெக மகளிர் அணி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திமுக, அதிமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். திருப்பத்தூர் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் சீனிவாச சேதுபதி, அவர்களுக்கு கட்சித் துண்டு அணிவித்து உறுப்பினர் அட்டைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், பெண்களே தவெக வளர்ச்சியின் அடித்தளம் என்றும், அவர்களால் அமைதியான அரசியல் மாற்றம் உருவாகி வருவதாகவும் கூறினார். மேலும், மாற்றுக் கட்சிகளில் இருந்து பலர் தவெகவில் இணைந்து வருவதால், எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியே இல்லாத நிலை உருவாகும் என்றும், தளபதி நிரந்தர முதலமைச்சராக இருப்பார் என்றும் தெரிவித்தார். மேலும்
சிங்கம்புணரி இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்படும் என சீனிவாச சேதுபதி உறுதியளித்தார்.
கொல்லங்குடியில் களைகட்டிய மாட்டு வண்டிப் பந்தயம்
கொல்லங்குடியில் களைகட்டிய மாட்டு வண்டிப் பந்தயம்
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ள கொல்லங்குடியில் மு
சட்ட விரோத மின்வேலியில் சிக்கி இளைஞர் ப*லி.
மானாமதுரையில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு தீவிரம்!
மானாமதுரை மண்பாண்டத்தில் களிமண்ணால் ஆன விநாயகருக்கு பணிகள் தீவிரம் 10 தினங்களில் வர்ணம் தீட்டு பணிகள் தொடக்கம்
Leave a Comment
Your comment will be visible after admin approval.